இலங்கையர்கள் சீன சகோதர சகோதரிகள், கொரோனாவை தடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு - இலங்கைக்கான முன்னாள் சீன தூதுவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 11, 2020

இலங்கையர்கள் சீன சகோதர சகோதரிகள், கொரோனாவை தடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு - இலங்கைக்கான முன்னாள் சீன தூதுவர்

கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு சகல ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக இலங்கைக்கான முன்னாள் தூதுவர் சென் சுயுஹான் (H.E. Cheng Xueyuan ) தெரிவித்துள்ளார்.

பீஜிங் நகரத்தில் இருந்து இலங்கைக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 

தமது பதவி காலத்தில் இலங்கையின் 9 மாவட்டங்களுக்கு சென்றதாகவும், இலங்கையின் இயற்கை அழகு தொடர்பில் தாம் பெரும் மகிழ்ச்சி அடைவதாகவும் அனைத்து இலங்கையர்களிடமும் தாம் விடைபெறுவது தொடர்பில் தம்மால் அறிவிக்க முடியாமை குறித்து தான் கவலை அடைவதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் சீன மக்கள் தொடர்பில் கொண்டுள்ள உண்மையான அன்பு மற்றும் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கையர்கள் என்பது சீன சகோதர சகோதரிகள் என்று குறிப்பிட்டுள்ள அவர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று அவர் மீண்டும் இலங்கைக்கு வரவிருப்பதாகவும் அவர் அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment