புகையிரத நிலையங்களில் பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத அதிபர் சங்கம் அறிவித்துள்ளது.
அத்தோடு பொதிகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது இன்று (17) நண்பகலிருந்து நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment