இஸ்ரேல் பிரதமரும் தன்னை தனிமைப்படுத்தினார் - News View

About Us

About Us

Breaking

Monday, March 30, 2020

இஸ்ரேல் பிரதமரும் தன்னை தனிமைப்படுத்தினார்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் நெருங்கிய சகாவொருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதை தொடர்ந்து பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தன்னை தனிமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். 

பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் அவரது அலுவலக சகாக்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. 

பிரதமரும் அவரது சகாக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களை தனிமைப்படுத்துக் கொள்கின்றனர் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

வைரஸ் பரவியுள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இஸ்ரேல் பிரதமரின் ஆலோசகர் ரிவ்கா பலுச் என்பவர் வைரஸ் தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

No comments:

Post a Comment