ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு! - News View

About Us

About Us

Breaking

Monday, March 23, 2020

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு!

ஊடகவியலாளர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோனைக்கு அமைவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக 2020 ஆம் ஆண்டுக்காக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டை (Media Accreditation) இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை. இருப்பினும் 2019ஆம் ஆண்டுக்கு செல்லுபடியானதாக வழங்கப்பட்டுள்ள ஊடக அடையாள அட்டையைக் கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் இந்த சந்தர்ப்பத்தில் தமது ஊடக பணிகளை தடையின்றி முன்னெடுப்பதற்கு வசதிகளை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் சில தினங்களில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment