சீனாவில் தோன்றி, ஆசியாவை கடந்து, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை தாக்கி வளைகுடா நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனாவுக்கு பஹ்ரைனில் 67 வயது பெண்மணி பலியானார்.
சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தொற்று வளைகுடா மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளை தாக்கியுள்ளது.
குவைத், துபாய், சவுதி அரேபியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இந்நோய் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அதிதீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 6 நாடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், பஹ்ரைன் நாட்டில் கொரோனா தாக்கத்துக்காக சிகிச்சை பெற்று வந்த 67 வயது பெண்மணி பலியானதாக அந்நாட்டு அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment