பொதுக் கூட்டங்கள், ஒன்றுகூடல்களை மட்டுப்படுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முடிவு - News View

About Us

About Us

Breaking

Saturday, March 14, 2020

பொதுக் கூட்டங்கள், ஒன்றுகூடல்களை மட்டுப்படுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முடிவு

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுக் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல் ஆகியவற்றை இன்று (14.03.2020) முதல் மறு அறிவித்தல் வரும் வரை மட்டுப்படுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது. 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ, சுகாதார அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார். 

இது குறித்து, இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை குறைக்க இது உதவும் என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

மேலும், "சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இன்று முதல், கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உதவும் வகையில், மறு அறிவித்தல் வரும் வரை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுக் கூட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நாங்கள் மட்டுப்படுத்துவதற்குத் தீர்மானித்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment