உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் உள்ள 11 அருங்காட்சியகங்களையும் தற்காலிகமாக மூட புத்தசாசன, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.
மறு அறிவித்தல் வரை, இவ்வாறு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.
வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதால் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் வெளியே செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment