உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸாரின் விடுமுறை, நாளாந்த ஓய்வு இரத்து - News View

About Us

About Us

Breaking

Thursday, March 26, 2020

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸாரின் விடுமுறை, நாளாந்த ஓய்வு இரத்து

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் நாளாந்த ஓய்வு ஆகியன இரத்து செய்யப்பட்டுள்ளன.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி வரை இவ்வாறு விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment