தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான சொகுசு பஸ் வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ பகுதியில் 3.6 மைல் கல்லுக்கு அருகில் இன்று (13) காலை குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாகும்புரவிலிருந்து காலி நோக்கிப் பயணித்த பஸ் வண்டியே இவ்வாறு தீ விபத்திற்கு உள்ளானது. பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தத்தின்போது எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் விரிவான விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment