இலங்கைக்கு முகக் கவசங்கள், பாதுகாப்பு ஆடைகளை வழங்கியது சீனா - கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு உதவத் தயார் - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

இலங்கைக்கு முகக் கவசங்கள், பாதுகாப்பு ஆடைகளை வழங்கியது சீனா - கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு உதவத் தயார்

சீன அரசாங்கமானது, மருத்துவ முகக் கவசங்கள் மற்றும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆடைகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான 1,000 ஆடைகள் மற்றும் 50,000 மருத்துவ முகக் கவசங்கள் ஆகியவற்றை இலங்கைக்கு சீன அரசாங்கம் வழங்கியுள்ளது.

இலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவர் Hu Wei மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கு இடையில் நேற்று (12) சீனத் தூதரகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.

அத்தோடு இந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் பட்சத்தில் அதனை கட்டுப்படுத்துவதற்காக சீனா உதவத் தயார் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டத்தின் கீழ் இலங்கைக்கு சீனாவினால் இப்பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment