மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் எச்சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தை கலைக்கலாம் - சட்டமா அதிபர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்தார் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 16, 2020

மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் எச்சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தை கலைக்கலாம் - சட்டமா அதிபர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்தார்

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தத்திற்கமைய மார்ச் முதலாம் திகதிக்கு பின்னர் எந்த வேளையும் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு முடியும் என சட்டமா அதிபர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தத்திற்கமைய பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு இருக்கும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக வினவி, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் சட்டமா அதிபருக்கு அனுப்பியிருந்த கடிதத்துக்கு பதில் கடிதத்திலே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போதைய பாராளுமன்றத்துக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி 4 வருடங்களும் 6 மாதங்களும் பூரணமாகின்றது. அதனால் எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதிக்கு பின்னர் எந்த வேளையும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெறுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னர் கலைத்தல் மற்றும் தேர்தல்கள் நடவடிக்கைகள் தொடர்பாக வினவி, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவுக்கு கடந்த வாரம் கடிதமொன்று அனுப்பி இருக்கின்றார். 

ஜனாதிபதி உரிய காலத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்தால், பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியலை கோரும் திகதி, அதன் இறுதித் திகதி, பொதுத் தேர்தலை நடத்தும் திகதி, பாராளுமன்ற சபை அமர்வு ஆரம்பமாகும் திகதி என்ற விடயங்களை பாராளுமன்றத்தை கலைப்பதாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதற்காவே ஜனாதிபதி செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு குறித்த கடிதத்தை அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த வாரத்துக்குள் தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி செயலாளருக்கு அறிவிக்க இருப்பதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment