வழிப் பிள்ளையார் சிலை உடைத்து வீசப்பட்டது - மட்டக்களப்பில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 12, 2020

வழிப் பிள்ளையார் சிலை உடைத்து வீசப்பட்டது - மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு - செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வழிப் பிள்ளையார் சிலை விசமிகளால் உடைத் தெறியப்பட்டுள்ளது. 

செங்கலடி எல்லை வீதியில் செங்கலடி உதய சூரியன் உதவிக் குழு அமைப்பினரால் அண்மையில் இவ் வழிப்பிள்ளையார் கோவில் அமைக்கப்படுள்ளது. 

இன்று காலை 06 மணியளவில் இச்சம்பவத்தை உதய சூரியன் உதவிக் குழு உறுப்பினர்கள் பிள்ளையார் சிலையை அடித்து உடைத்து வீசியுள்ளதை அவதானித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், நேற்றிரவு சுமார் 08 மணியளவில் இவ் வழிப்பிள்ளையார் முன்றலில் நின்று தாம் இறுதியாகச் சென்றதாகவும் இன்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளாகவும் தெரிவித்தனர். 

மேலும் இவ் வழிப் பிள்ளையார் சிலை அமைப்பதற்கு பல்லாண்டு காலமாக யுத்த காலத்தின் முன்னிருந்து வீதியோரமாக காடு பற்றியிருந்த சிறு இடத்தை துப்புரவு செய்து தாம் இச்சிலையை அமைத்தாகவும் அமைக்கும் போதே பல எதிர்ப்புக்கள் வந்ததாகவும் தெரிவித்தனர். 

இப்பிள்ளையார் சிலையை உடைத்தெறிந்த விஷமிகள் யாராக இருந்தாலும் தமிழர் வாழும் இப்பகுதியில் இவ்வாறான கீழ்த்தரமான வேலையை செய்வதை இத்துடன் நிறுத்த வேண்டும் எனவும் உதய சூரியன் உதவிக் குழுவினர் கவலை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment