ஊழல் பேர்வழிகளுக்கு தேர்தல்களின் போது வேட்பு மனுத் தாக்கள் செய்ய கட்சிகள் இடமளிப்பதால் அதன் பின் அவர்கள் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்ல இடமுண்டு. எனவே ஊழல் பேர்வழிகளுக்கு வேட்பு மனுக்கள் வழங்கக் கூடாது என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கத்தேரர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்தார்.
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சியுடனான விசேட சந்திப்பு நேற்று (02) இடம்பெற்றது.
இச்சந்திப்பில் ரோகன ஹெட்டியாரச்சியால் வரையப்பட்டுள்ள எதிர் வரும் பொதுத் தேர்தலுக்கான அபேட்சகர்களது தகுதிகள் தொடர்பாக நூலின் பிரதி ஒன்றைக் கையளித்து கலந்துரையாடும் போதே வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், ஊழல் காரர்களுக்கு வேட்பு மனுக்கள் செய்ய இடமளித்தபின் அவர்கள் தேர்தல்கள் மூலம் தெரிவாகின்றனர். ஊழல் பேர்வழிகள் பாராளுமன்றம் செல்லாதிருக்க ஒரே வழி இதுதான். இதற்கு மக்கள் பிரதிநிதிகள் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கினாலும் அதனை பின்பற்றிய நிலை ஒன்றைக் காண முடியவில்லை.
ஊழல் உள்ளவர்கள் தெரிவு செய்யப்படக் கூடாது என்பதே சகலரதும் எதிர் பார்ப்பாகும். ஆனால் தற்போது உள்ள நடைமுறைப்படி சட்ட முரணான வேலைகளில் கூட ஈடுபட்ட ஊழல்காரர்கள் பலரும் பாராளுமன்றம் செல்ல இடமளிக்கப்படுகிறது.
மக்கள் பிரதிநிதிகள் தமக்கு வழங்கும் வரப்பிரசாதங்களையே பொதுமக்கள் கருத்திற்கொண்டு வாக்களிக்கின்றனர். அது பொதுமக்களது தவறல்ல. நடை முறையிலுள்ள தேர்தல் முறையின் தவறாகும் என்று மல்வத்தை மகாநாயக்கத் தேரர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
அக்குறணை நிருபர்
No comments:
Post a Comment