கொழும்பு ரீ.பீ. ஜாயா இல்ல விளையாட்டுப் போட்டி - பிரதம அதிதியாக பைஸர் முஸ்தபா கலந்து சிறப்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

கொழும்பு ரீ.பீ. ஜாயா இல்ல விளையாட்டுப் போட்டி - பிரதம அதிதியாக பைஸர் முஸ்தபா கலந்து சிறப்பிப்பு

கொழும்பு - 02, ரீ.பீ. ஜாயா ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த (மெய் வல்லுநர்) இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள், கல்லூரி அதிபர் எம்.ஆர்.எம். மன்ஸில் தலைமையில், மலே கிரிக்கட் கழக விளையாட்டரங்கில், (13) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. 

இதில், ரபா (பச்சை) இல்ல அணியினர் 214 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்திற்குத் தெரிவாகி, 2020 ஆம் ஆண்டுக்கான சாம்பியன் வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. ரபா இல்ல அணித்தலைவர் எம்.ஆர்.எம். மிஸ்பர், சாம்பியன் வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டார். 

இரண்டாம் இடத்திற்கு ஜுமைல் (சிவப்பு) இல்ல அணியினர் 191 புள்ளிகளையும், மூன்றாம் இடத்திற்கு கெய்ரோ (மஞ்சல்) இல்ல அணியினர் 123 புள்ளிகளையும் பெற்று, எம்.ஐ.எம். இமாம், எம்.டி.எம். மின்ஹாஜ் ஆகிய இல்லத்தலைவர்கள் முறையே வெற்றிக் கிண்ணங்களைத் தமதாக்கிக் கொண்டனர்.

அணிநடைப் போட்டியில் கெய்ரோ இல்லமும், விநோத உடைப்போட்டியில் கெய்ரோ இல்லமும் (கண்டிய நடனம்) முதலாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன. 

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி (பா.உ.) பைஸர் முஸ்தபா கலந்து சிறப்பித்தோடு, சிறப்பதிதிகளாக அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஐ.ஏ. காதிர் கான் 

No comments:

Post a Comment