பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனும், சுமந்திரனும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே அரசியலில் செல்வாக்குச் செலுத்துகின்றார்கள். அரசியல் தீர்வு குறித்து அவர்களால் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே முடியாது."
இவ்வாறு கூறினார் அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் தொடர்பாடல் இராஜாங்க அமைச்சருமான லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன.
"அரசியல் தீர்வு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிப்பீடம் ஏறவில்லை" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடக அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது "இந்த நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு அனைத்து இன மக்களுக்கும் முரண்பாடு ஏற்படாத வகையிலேயே தீர்வுகளை நாம் வழங்குவோம்.
சாய்ந்தமருது நகர சபையும் அவ்வாறே உருவாக்கப்பட்டுள்ளது. எந்த இனத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இந்தத் தீர்மானத்தை அரசு எடுத்தது.
எனவே, அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளை மாத்திரமே எம்மால் வழங்க முடியும். நாட்டில் மீண்டும் இனவன்முறையை ஏற்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விரும்புகின்ற தீர்வுகளை எம்மால் வழங்க முடியாது" - என்றார்.
No comments:
Post a Comment