அரை மணி நேரம் பாம்பின் கட்டுப்பாட்டிலிருந்த அலுவலகம் - News View

About Us

About Us

Breaking

Monday, February 3, 2020

அரை மணி நேரம் பாம்பின் கட்டுப்பாட்டிலிருந்த அலுவலகம்

திடீரென புகுந்த நாகபாம்பு ஒன்றினால் அலுவலக ஊழியர்கள் பதற்றமடைந்து ஓடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள கமநல சேவைகள் நிலையத்தில் இன்று (3) மதியம் குறித்த பாம்பு உட்புகுந்து பதுங்கி இருந்துள்ளது.

இதன் போது அங்கு வேலை செய்யும் பெண் உத்தியோகத்தர் ஒருவர், நெழிவுடன் பாம்பு ஊர்வதை கண்ணுற்று கூக்குரலிட்டுள்ளார். அவ்வேளை சக உத்தியோகத்தர்களும் அந்த பாம்பை நாகபாம்பு என இனங்கண்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரமாக குறித்த பாம்பு அவ்வலுவலகத்தில் பதுங்கி அராஜகம் செய்ததுடன் இறுதியாக அருகில் உள்ள வயல் வெளிக்குள் நகர்ந்து சென்றுள்ளது.

பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment