கல்முனை ஸாஹிராவில் 2002 இல் க.பொ.த சா/த, மற்றும் 2005 இல் க.பொ.த உ/த கற்ற BatchOfive மாணவர்களின் ஒன்றுகூடலும் மிக விமர்சையாக நடைபெற்றது.
15 வருடங்களின் பின்னரான கல்முனை ஸாஹிராவின் BatchOfive மாணவர்களின் சந்திப்பும் ஒன்றுகூடலும் 2020.02.22 ஆம் திகதி நிந்தவூர் அட்டப்பளத்தில் அமைந்துள்ள Half Moon Beach Resort யில் பிற்பகல் 4.00 மணி தொடக்கம் நல்லிரவு வரை நடைபெற்றது.
இதில் கடந்த கால அனுபவங்களை சுவாரசியமாக பகிர்ந்து கொண்டனர்.
15 வருடங்களின் பின்னர் ஒன்றுகூடியவர்களில் தொழில் நிறுவனர்கள், தொழில் முயற்சியாளர்கள், வைத்தியர்கள், பொறியியளாலர்கள், பல்கழைக்கலக விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் உலமாக்கள் என அத்தனை வேறுபாடுகளையும் கலைந்து பாடசாலைக்கால நட்புக்கள் என்ற ஒரே கூரையில் ஒன்று சேர்ந்தமை பாராட்டத்தக்கதாகும்.
இதில் பங்குபற்றிய, பங்குபற்றுவதற்காக விரும்பிய, அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன் குறிப்பாக வெளிநாட்டு வாழ் BatchOfive நண்பர்களுக்கும் ஏற்பாட்டு குழுவினர் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
முஹம்மது பிர்தௌஸ்
No comments:
Post a Comment