பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பாளர் உள்ளிட்ட மாணவர் சங்க உறுப்பினர்கள் சிலர் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவை நேற்று சந்தித்தனர்.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
நுண்கலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் நடைமுறைப்படுத்தப்படும் பிரயோக மற்றும் தகுதிகாண் பரீட்சைகளை நிறுத்துவது தொடர்பான கடிதம் ஒன்றை கையளிப்பதற்காக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் சங்கைக்குரிய ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் உள்ளிட்ட உறுப்பினர்களுடன் தேரர் உள்ளிட்ட மாணவர் சங்கங்களின் உறுப்பினர்கள் சிலர் வருகை தந்திருந்தனர்.
உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இவர்களை தமது அமைச்சுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். 2020 ஆம் ஆண்டு பணிகளை முன்னெடுக்கும் வருடமாக நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் உயர் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் கூடுதலான கவனம் செலுத்தி செயற்படுவதுடன் பேச்சுவார்த்தை மற்றும் இணக்கப்பாட்டுடன் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தினார்.
ஜனநாயக சிவில் நிர்வாக கட்டமைப்பிற்குள் சுதந்திரமாக மாணவர்களுக்கு கல்வியை பெற்றுக்கொள்ளும் சூழலைக்கொண்ட பல்கலைக்கழக கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் வன்முறை அற்ற மற்றும் மனித நேயத்தைக்கொண்டதாக மாணவர்களுக்கு எடுத்துக்காட்டான நாடாக நாடு தரமுயர்த்தப்படும் என்றும் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் மேலும் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment