அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய அரசின் சகலவித ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம் - சம்பந்தன் - News View

About Us

About Us

Breaking

Monday, December 2, 2019

அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய அரசின் சகலவித ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம் - சம்பந்தன்

(ஆர்.யசி)
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையில் உச்சபட்ச தீர்வுகளை வழங்குவதாக வாக்குறுதிகளை வழங்கிய அரசாங்கம் இப்போதாவது சர்வதேச குரல் மற்றும் தமிழ் மக்களின் நிலைகளை கருத்தில் கொண்டு 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 

பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் கூறினார். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதமரால் முன்வைக்கப்பட்ட தமிழர் விவகாரங்கள் குறித்து தமிழர் அரசியல் தரப்பு மத்தியில் நிலவும் நிலைப்பாடுகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.

No comments:

Post a Comment