வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் கைது! - News View

About Us

About Us

Breaking

Friday, December 13, 2019

வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் கைது!

வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற இருவரை குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின்போது, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற குறித்த சந்தேகநபர்கள் நேற்று (13) இரவு மஹர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், தாங்களே குறித்த வெள்ளை வேன் கடத்தல் தொடர்பான சாரதிகள் என கடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளம் படுத்திக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment