அரச நிறுவனங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான பரிந்துரை ஜனாதிபதி செயலாளரிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, December 12, 2019

அரச நிறுவனங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான பரிந்துரை ஜனாதிபதி செயலாளரிடம் கையளிப்பு

40 அரச நிறுவனங்களுக்கான தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களை நியமிப்பதற்கான பரிந்துரை ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரச நிதி நிறுவனங்கள், அரசியலமைப்பு நிறுவனம், அரச தொழில் முயற்சியாளர்கள் சபை ஆகியவற்றிற்கு தகுதியானவர்களை பரிந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்ட 6 பேர் அடங்கிய குழுவினால் இந்த பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதவிக்கு தகுதியான மூவர்களின் பெயர் அடங்கலாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அந்த குழுவின் உறுப்பினர் நாலக்க கொடஹேவா குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, ஒரு வாரத்திற்குள் அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையை நியமிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

ஒரே துறைசார் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் பிரேரணையும் ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, அரச நிறுவனங்களுக்கு தகுதியானவர்களை பரிந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment