சிகிச்சை பெறுவதற்கு வருகை தந்த சிறுமி காய்ச்சலினால் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 10, 2019

சிகிச்சை பெறுவதற்கு வருகை தந்த சிறுமி காய்ச்சலினால் உயிரிழப்பு

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுவதற்கு வருகை தந்த சிறுமி ஒருவர் இன்று (10) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை மூன்றாம் கட்டை பகுதியைச் சேர்ந்த வீ. கிஷோபிதா (13) எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காய்ச்சல் காரணமாக மருந்து எடுப்பதற்காக வருகைதந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னரே உயிரிழந்துள்ளதாகவும் ஏற்கனவே காய்ச்சல் காரணமாக வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றதாகவும் தெரியவருகின்றது.

தொடர்ச்சியாக காய்ச்சல் காணப்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு வருகை தந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

(நிருபர் அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment