தீர்மானம் மிக்க கூட்டத்தை பகிஷ்கரித்த தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் - News View

About Us

About Us

Breaking

Monday, November 4, 2019

தீர்மானம் மிக்க கூட்டத்தை பகிஷ்கரித்த தமிழரசுக் கட்சி எம்.பிக்கள்

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இரு பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகிறது.

வவுனியா, இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் குறித்த கலந்துரையாடல் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. அதில் இரா.சம்மந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

காலை 10.30 இல் இருந்து மாலை 4.30 வரை இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் மற்றும் சி.சிறிதரன் ஆகிய இருவரும் கலந்து கொள்ளவில்லை. 

குறித்த கலந்துரையாடல் முடிவில் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழரசுக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment