“அரசியல் வாழ்க்கை இன்னும் முடிவடையவில்லை, அதனை யாரும் தடுக்க முடியாது” - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால - News View

About Us

About Us

Breaking

Saturday, November 30, 2019

“அரசியல் வாழ்க்கை இன்னும் முடிவடையவில்லை, அதனை யாரும் தடுக்க முடியாது” - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

தனது அரசியல் வாழ்க்கை இன்னும் முடிவடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலநறுவையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஜனாதிபதியாக இல்லாததால் தனது அரசியல் வாழ்க்கையும் முடிந்துவிட்டதாக சிலர் கருதுகின்றனர் என கூறினார்.

அரசியலில் மீண்டும் வர வேண்டும் என்று நம்புவதாகவும், தன்னால் முடியும் வரை அரசியலில் தொடருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தனது இறுதி மூச்சை சுவாசிக்கும் வரை நாட்டிற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்வேன் என்றும் அதனை யாரும் தடுக்க முடியாது எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 16 ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகியிருந்தார். இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்தில் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment