கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி இயக்குபவரை திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் CID இற்கு வந்தபோது, கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
அவரை இன்றையதினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment