ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளும் இராஜாங்க அமைச்சர்களான அஜித் பீ. பெரேரா, சுஜீவ சேனசிங்க மற்றும் புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் சட்டத்தரணி சர்மிலா பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இன்று (04) முற்பகல் தேர்தல்கள் செயலகத்தில் அவருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது, அன்னம் சின்னத்தின் கீழ் புதிய ஜனநாயக முன்னணியில் சஜித் பிரேமதாஸ சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment