கோட்டாபயவின் பிரஜாவுரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது - News View

About Us

About Us

Breaking

Friday, October 4, 2019

கோட்டாபயவின் பிரஜாவுரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது

இலங்கை குடிமகனாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை அங்கீகரிப்பதை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பு இன்று பிற்பகல் 6.00 மணிக்கு வழங்கப்படவுள்து.

மேன்முறையிட்டு நீதிமன்ற தலைவர் யசந்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர, மஹிந்த சமயவர்தன ஆகிய மூரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (04) காலை 9.30 மணி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இது தொடர்பிலான விசாரணையை நிறைவு செய்யும் பொருட்டு, அனைத்து தரப்பினருக்கும் இன்று பிற்பகல் 3.15 வரை கால அவகாசம் வழங்குவதாக நீதிபதிகள் குழாம் அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பினரதும் சமர்ப்பிப்புகள் இறுதி செய்யப்பட்ட பின்னர், இன்று பிற்பகல் 6.00 மணிக்கு தீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதிகள் குழாம் அறிவித்திருந்தது.

பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர மற்றும் புரவெசி பலய அமைப்பின் இணை அழைப்பாளரும் சமூக ஆர்வலருமான காமினி வியங்கொட ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட இம்மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு, இன்று மூன்றாவது தினமாக விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment