5 கோடி ரூபா மோசடி - முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த, சதோச தலைவர் நலின் பெனாண்டோ ஆகியோர் வெளிநாடு செல்ல தடை - News View

About Us

About Us

Breaking

Friday, October 4, 2019

5 கோடி ரூபா மோசடி - முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த, சதோச தலைவர் நலின் பெனாண்டோ ஆகியோர் வெளிநாடு செல்ல தடை

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் முன்னாள் சதோச தலைவர் நலின் பெனாண்டோ ஆகியோர் வெளிநாடு செல்ல தடை விதித்து மேல் மாகாணத்தின் இரண்டாவது விசேட உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (04) குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியிருந்தது.

கரம் பலகை உள்ளிட்ட சுமார் 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான விளையாட்டு உபகரணங்களை அரசியல் நோக்கங்களுக்காக வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்றைய தினம் (04) நீதிபதிகளான ஆர். குருசிங்க, சஷி மகேந்திரன், அமல் ரணராஜா ஆகிய மூவரடங்கிய குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரின் வேண்டுகோளை கருத்திற்கொண்ட நீதிமன்றம், குறித்த உத்தரவை வழங்கியுள்ளது. குறித்த வழக்கு டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​அரசியல் நோக்கங்களுக்காக கரம் பலகை உள்ளிட்ட சுமார் ரூபா 5 கோடி பெறுமதியான விளையாட்டு உபகரணங்களைப் பகிர்ந்தளித்தமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment