தேர்தல் சட்டத்தை மீறும் வகையில், அரசாங்க வேலைவாய்ப்புக்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 21, 2019

தேர்தல் சட்டத்தை மீறும் வகையில், அரசாங்க வேலைவாய்ப்புக்கள்

தேர்தல் சட்டத்தை மீறும் வகையில், அரசாங்க வேலைவாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்குள் அவ்வாறான 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மொனராகலை பகுதியில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை தமது அமைப்பிற்கு 4 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சில அரச நிறுவனங்களில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment