400 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் கணக்குகளுடன் தொடர்புள்ள தொலைபேசி எண்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முறையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத கட்டமைப்பில் 419 மில்லியன் பேஸ்புக் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டிருந்தன.
பேஸ்புக் கணக்குகள், அவற்றுடன் தொடர்புடைய எண்கள், தொலைபேசி எண்கள், பாலினம், கணக்கு எங்கிருந்து பயன்படுத்தப்படுகிறது ஆகிய விபரங்கள் கட்டமைப்பில் அடங்கும் என்று தொழில்நுட்ப இணையத்தளமான டெக்பிரன்ச் தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு கட்டமைப்பிலிருந்து தகவல்கள் நீக்கப்பட்டன. அதுவரை யார் வேண்டுமானாலும் அதிலிருந்த தகவல்களை ஊடுருவியிருக்கலாம் என்றும் தளம் கூறியது. தகவல் கசிவை பேஸ்புக் உறுதி செய்துள்ளது.
No comments:
Post a Comment