கிழக்கு கைத்தொழில் கண்காட்சி ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வாவினால் ஆரம்பித்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 5, 2019

கிழக்கு கைத்தொழில் கண்காட்சி ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வாவினால் ஆரம்பித்து வைப்பு

கிழக்கு மாகாண கிராமிய தொழிற்றுறை திணைக்களத்தினால் நடத்தப்படும் கிழக்கு கைத்தொழில் கண்காட்சி இன்று (05) கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு - கல்லடி தொழிற்றுறை திணைக்கள மாவட்ட அலுவலகத்தில் கைத்தொழில் கண்காட்சி இன்றையதினமும் நாளையதினமும் (06) நாளைமறுதினமும் (07) இடம்பெறவுள்ளதாக, கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில்துறை திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் கவிதா உதயகுமார் தெரிவித்தார்.

கிராமிய கைத்தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், கைத்தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கவும், அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கிலேயே இக்கண்காட்சி இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கிழக்கு மாகாண தொழிற்றுறை திணைக்களத்தின் 26 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள விசேட வடிவமைப்பு நிலையம் அமைப்பதற்கான கட்டிடத்துக்கான அடிக்கல்லிணையும் கிழக்கு மாகாண ஆளுநர் நாட்டி வைத்தார். 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபேகுணவர்தன, கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்தன, கிழக்கு மாகாண உள்ளுராட்சி மற்றும் கிராமிய தொழில் துறை அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

அப்துல்சலாம் யாசீம்

No comments:

Post a Comment