நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா முன்னிலையில் தீ மூட்ட முயற்சி! - News View

About Us

About Us

Breaking

Thursday, September 5, 2019

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா முன்னிலையில் தீ மூட்ட முயற்சி!

சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த போராட்டம் யாழ். சாவகச்சேரி நகராட்சி மன்றம் முன்பாகவுள்ள கேட்போர் கூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களை சேர்ந்த புறக்கணிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்களே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

யாழ்.சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தனக்கு தானே மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்ட முற்பட்ட வேளை நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் தெறித்துள்ளது.

இவ்வாறு சாவகச்சேரி நகராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நியமனம் பெறுவதற்காக சென்றிருந்த சுகாதாரத் தொண்டர்கள் மாற்று வழியில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களும் உள்ளே செல்ல முற்பட்டமையால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment