வெடிபொருட்கள் மீட்கப்பட்ட வண்ணாத்திவில்லு காணியில் மருத்துவக் கழிவுகள் கண்டுபிடிப்பு! - News View

About Us

Add+Banner

Wednesday, September 4, 2019

demo-image

வெடிபொருட்கள் மீட்கப்பட்ட வண்ணாத்திவில்லு காணியில் மருத்துவக் கழிவுகள் கண்டுபிடிப்பு!

1567575051-medi-waste-2
வனாத்தவில்லு - புபுதுகமவிற்கு அருகில் காணி ஒன்றில் இனந்தெரியாத சிலரால் வீசிச் செல்லப்பட்ட மருத்துவக் கழிவுத் தொகை ஒன்று கிராமவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வனாத்தவில்லுவ பகுதியில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட லெக்டோ தோட்டப்பகுதியின் காட்டுப்பகுதியில் இந்த மருத்துவக் கழிவுத் தொகை இனந்தெரியாத சிலரால் விட்டுச் செல்லப்பட்டுள்ளதாக புபுதுகம கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மருத்துவக் கழிவுத் தொகையில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி, பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத சிறிய மருந்து போத்தல்கள் உள்ளிட்ட வேறு சில பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மருத்துவக்கழிவுகள் எக்காரணத்திற்கு இப்பகுதியில் வீசிச் செல்லப்பட்டுள்ளது என்பது குறித்து கிராமவாசிகள் சந்தேகிப்பதாகவும், கிராமவாசி ஒருவர் அப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது குழி ஒன்றில் இருந்த குறித்த மருத்துவக் கழிவுகளை கண்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த கழிவுத் தொகையில் சிம் அட்டையின் பகுதிகளும் மற்றும் காலாவதியான வாகன காப்புறுதி அட்டைகள் சிலவும் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரியை வினவிய போது, இது தொடர்பில் இதுவரை தகவல் கிடைக்க வில்லை எனவும், இந்த தகவலுக்கு அமைய தான் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று மருத்துவக் கழிவுப் பொருட்கள் தொடர்பில் ஆராய்ந்து தகவல் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *