குளவிகள் கொட்டியதினால் 24 பேர் வைத்தியசாலையில் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 5, 2019

குளவிகள் கொட்டியதினால் 24 பேர் வைத்தியசாலையில்

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 24 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரம் தோட்டம் தலங்கந்தை பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இன்று (05) மாலை 3 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 6 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், மேலும் 18 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இதில் 4 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆண்களும், 21 பெண்களும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

(மலையக நிருபர்கள் கிரிஷாந்தன், சுந்தரலிங்கம்)

No comments:

Post a Comment