இன்றைய தினம் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஈதுல் பித்ர்பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஈதுல் பித்ர் பெருநாள் என்பது தொடர்ச்சியாக ஒரு மாத காலம் நோன்பு நோற்றுஇ இரவூ காலங்களில் நின்றுவணங்கி இறை நெருக்கத்தைப் பெற்றுஇ இறை வழிகாட்டலை அடைந்து கொண்ட மனநிலையையூம்மகிழ்ச்சியையூம் ‘அல்லாஹு அக்பர்’ எனக் கூறி அல்லாஹ்வை பெருமைப்படுத்தி அல்லாஹ்வூக்கு நன்றிதெரிவிக்கும் தினமாகும்.
மேலும் அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாக புத்தாடைகளை அணிந்தும் நல்ல உணவூகளை பரிமாறியூம்வாழ்த்துக்களையூம் சந்தோஷத்தையூம் பரிமாறிக் கொள்ளும் தினமுமாகும்.
சர்வதேச முன்னெடுப்புக்களாலும் எமது சமூகத்தின் வழி தவறிய சில இளைஞர்களின் மிலேச்சத்தனமானசெயற்பாட்டினாலும் அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்த முனையூம் சில சக்திகளாலும் இக்கட்டான ஒருசூழலில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் ஈதுல் பித்ர் பெருநாளைக்கொண்டாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தில் மனம் தளர்ந்து விடாமல் பெருநாளை மிக எளிமையாகக் கொண்டாடுவோம்…பெருநாள் தொழுகையோடு எமது கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு நாட்டுக்கும் சமூகத்துக்கும் தீயசக்திகளின் பிடிகளிலிருந்து உண்மையான விடுதலை வேண்டிப் பிரார்த்திப்போம். இலங்கையின்நல்லதொரு எதிர்காலத்துக்காகவூம் அடுத்துவரும் காலங்களில் உழைக்க முன்வருவோம். அல்லாஹ்எங்களது நற்செயல்களைப் பொருந்திக்கொள்வானாக!
அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி
தலைவர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
No comments:
Post a Comment