நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவதற்கு விரும்பவில்லையென இலங்கை பழங்குடி வேடுவர் சமூகத்தின் தலைவரான, உருவாரிகே வன்னிலா அத்தோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், உருவாரிகே வன்னிலா அத்தோ போட்டியிடவுள்ளார் என அண்மையில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இந்நிலையிலேயே அவ்விடயம் குறித்து வன்னிலா அத்தோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு பலரும் என்னை கேட்கின்றனர். ஆனால் குழப்பகரமான அரசியலில் சிக்கிக்கொள்ள எனக்கு ஒருபோதும் விருப்பமில்லை.
மேலும் நாடாளுமன்றத்தில் நிகழும் செயற்பாடுகளை போன்று சிறிய விடயங்களுக்கெல்லாம் போராட்டத்தை மேற்கொண்டு புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் ஆசை எனக்கில்லை” என உருவாரிகே வன்னிலா அத்தோ கூறியுள்ளார்.
No comments:
Post a Comment