யாழில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நால்வர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 4, 2019

யாழில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நால்வர் கைது

யாழ். நகரில் நள்ளிரவு வேளை சந்தேகத்திற்கிடமான முறையில் வீதியில் நின்ற நால்வரை, யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீதி ரோந்து நடவடிக்கையில் நேற்று (04) நள்ளிரவு ஈடுபட்டிருந்த பொலிஸார், இச்சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் விசாரணை நடத்தியபோது, உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காத காரணத்தினால், குறித்த நால்வரையும் கைது செய்ததாக, பொலிஸார் தெரிவித்தனர். 

கண்டியைச் சேர்ந்த இருவரும், யாழ். நாவாந்துறையைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 27 வயது முதல் 30 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை முன்னெடுத்து வருவதோடு, விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சுமித்தி தங்கராசா - யாழ்ப்பாணம் 

No comments:

Post a Comment