ஹோட்டல்களுக்கான குறைந்தபட்ச அறை கட்டணம் நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 30, 2019

ஹோட்டல்களுக்கான குறைந்தபட்ச அறை கட்டணம் நீக்கம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு நகர ஹோட்டல்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குறைந்தபட்ச அறை கட்டணத்தை (MRR) நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல்களை அடுத்து, சுற்றுலாத்துறை பாரிய அளவில் பாதிப்புக்குள்ளானதால், குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையில், ஹோட்டல்களின் அறை கட்டணத்தை அதிகார சபை தீர்மானிப்பதை விடவும், ஹோட்டல்கள் தீர்மானிப்பதே சிறப்பானதாக அமையும் என அது சுட்டிக்காட்டியுள்ளது.

சீனா, ஜேர்மனி, சுவீடன், ஸ்விட்சர்லாந்து, இந்தியா ஆகிய நாடுகள் தங்களது பயணத் தடையை தளர்த்தி இலங்கைக்கு வருகை தரும் போது அவதானமாக இருக்குமாறு தற்போது தெரிவித்துள்ளன.

ஆயினும் மேலும் ஓரிரு வாரங்களில் இப்பயணத் தடை முற்றாக நீக்கப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ள இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அது தொடர்பில் இராஜதந்திர ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment