செல்லுப்படியாகும் விசா அனுமதிப்பத்திரங்களின்றி சட்டவிரோதமாக நாட்டில் தொழில் புரியும் மற்றும் தங்கியிருப்பவர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன, குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு அவர் விடுத்துள்ள விசேட பணிப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முறையான விசா அனுமதிப் பத்திரமின்றி மத பாடசாலைகளிலும் சில நிறுவனங்களிலும் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதேபோல் வீசா அனுமதிப்பத்திரமின்றி பலர் நாட்டில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எச்.எம்.ஹலீமுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வீசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டில் தங்கியுள்ள அனைவரையும் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment