பாடசாலைகளின் பாதுகாப்பு பற்றி பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 30, 2019

பாடசாலைகளின் பாதுகாப்பு பற்றி பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

பாடசாலைகளின் பாதுகாப்பு பற்றி பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களிடம், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

நீர்கொழும்பிலுள்ள கத்தோலிக்க பாடசாலைகளில் இன்று பயங்கரவாத தாக்குதல் இடம்பெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக கூறி வதந்திகள் பரவி வருவதாகவும், அவற்றில் உண்மை இல்லை எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பாடசாலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 

இதேவேளை, பாடசாலை வளாகத்திற்குள் மாணவர்களை தவிர வேறு எவரையும் அனுமதிக்க வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாக, கொழும்பிலுள்ள பல கத்தோலிக்க பாடசாலைகள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment