யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பெயரில் துண்டுப்பிரசுரம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 10, 2019

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பெயரில் துண்டுப்பிரசுரம்

பகிடிவதையில் ஈடுபடும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உடல் பாகங்களை, ஈவு இரக்கமின்றி வெட்டியெறிவோம் என ஆவா குழுவின் பெயரால் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இந்த எச்சரிக்கை குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதிகளிலும் இவை ஒட்டப்பட்டுள்ளன.

"ஆவாவை சமூக விரோதிகளாக ஊடகங்கள் சித்திரித்துள்ளன. ஆனால், பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும், சமூக சீர்கேட்டையும் அழிக்கும் அமைப்பாகவே எமது அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது" என்ற கொள்கை விளக்கமும் அதில் இடம்பெற்றுள்ளது.

அந்தத் துண்டுப் பிரசுரத்தில், "இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கான தண்டனைகள் இலங்கையில் இருக்கின்றபோதும் பல பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்று வருகின்றது.

ஈழ பூமியில் ஈழப்போராட்டங்கள் இடம்பெற்ற காலத்தில் இல்லாத பகிடிவதைகள் இப்போது தலைதூக்கியதற்கான காரணங்கள் என்ன?

இது தொடர்பில் பல முறைப்பாடுகள் ஆவா குழுவினருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. இதுவரை காலமும் உண்மைக்குப் புறம்பாக - ஊடகங்களால் ஆவா குழு சமூகச் சீர்கேட்டாளர்களாகவே கூறப்பட்டு வருகின்றது.

எமது ஆவா அமைப்பானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் சமூகச் சீர்கேடுகளையும் அழிக்கும் அமைப்பாகவே நாம் இதைக் கட்டமைத்துள்ளோம்.

எமது அமைப்பின் 40 சதவீதமானோர் பல்கலைக்கழக மாணவர்களே. ஆகவே, பல்கலைக்கழகப் பகிடிவதையைத் தவிர்ப்பதற்கு ஆவா குழுவினால் Anti Ragging Committee உருவாக்கப்பட்டுள்ளது.

மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ பல தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்திருப்பது நீங்கள் அறிந்ததே.

அதுமட்டும் இன்றி பல்கலைக்கழக மாணவர்களான சுலக்சன் மற்றும் கஜன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியபோதும் நாம் மேற்கொண்ட நடவடிக்கையும் நீங்கள் அறிந்ததே.

ஆகவே, இனிவரும் காலங்களில் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை இடம்பெறுமாயின் பகிடிவதைகளில் ஈடுபடுபவர்களின் உடல் பாகங்கள் ஈவு இரக்கமின்றித் துண்டிக்கப்படும்.

பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதையை எமக்கு அறியத் தரலாம். அது பல விசாரணைகளின் பின்பு உண்மைத்தன்மை அறியப்பட்டு அதற்கான தண்டனைகள் வழங்கப்படும்" - என்றுள்ளது.

No comments:

Post a Comment