தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் 2 சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2019

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் 2 சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கொட்டாஞ்சேனை – மெசஞ்சர் வீதியில் கைது செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டு சந்தேகநபர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய முன்னிலையில், சந்தேகநபர்களை இன்று ஆஜர்படுத்தியதை அடுத்து தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 2 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து இறுவெட்டுகளும், மடிக்கணினியும், கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment