மட்/மம/செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய அதிபராக கடமையாற்றும் திரு. எம்.எஸ். சுபைதீன் அவர்கள் 04.12.2015 தொடக்கம் அதிபர் தரம் 1 இற்கு பதவியுயர்வு பெற்ற அரசாங்க சேவை ஆணைக் குழுவினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை கல்வியமைச்சின் அதிபர் பிரிவுக்கான உதவிச் செயலாளரிடமிருந்து இன்று (03.04.2019) பெற்றுக் கொண்டார்.
பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் முதன் முதல் அதிபராக சுமார் 11 வருடங்கள் கடமையாற்றி அப்பாடசாலையை அனைவரும் விரும்பும் பாடசாலையாக மாற்ற ஆசியர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பை அதிகம் பெற்றவர் இவர்.
கடந்த ஆறு வருடங்களாக செம்மண்ணோடை அல்ஹம்றா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி வரும் இவர் இப்பாடசாலையை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பிரதேசத்தின் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றாக மாற்றியதுடன், க.பொ.த (சா/த) ரப் பரீட்சையில் பாடசாலையின் முன்னேற்றத்திற்கும், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதிலும் ஆசிரியர் பெற்றோர் பழைய மாணவர் அரசியலவாதிகளின் ஒத்துழைப்புடன் வெற்றி கண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் ஆசிரியராகவும் பிரதி அதிபராகவும் ப/ஹப்புத்தளை தமிழ் மஹா வித்தியாலயம், மட்/ ஓட்டமாவடி மத்திய கல்லூரி, மட்/ மீராவோடை அல்ஹிதாயா மஹா வித்தியாலயம் ஆகியவற்றில் கடமையாற்றிய இவர் ஒரு பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசியருமாவார்.
ஏற்கனவே தனது பாடசாலையை சிறப்பாக நிர்வகித்தமைக்காக கல்வியமைச்சினால் 15 நாட்கள் மாலைதீவில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Jawahir Saly
No comments:
Post a Comment