இரண்டரை அடி நீளமான வாளுடன் நடமாடிய நபர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, March 31, 2019

இரண்டரை அடி நீளமான வாளுடன் நடமாடிய நபர் கைது

யாழ். கீரிமலை பிரதேசத்தில் வாளுடன் நடமாடிய குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் காங்கேசன்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கீரிமலை பிரதான வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் ஒருவர் வாளுடன் நடமாடுவதாக நேற்று (30) இரவு காங்கேசன்துறை பொலிசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் வழங்கினார்கள்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் வாளுடன் நடமாடிய குறித்த நபரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டரை அடி நீளமான வாளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் கொல்லன்கலட்டி பகுதியை சேர்த்த 27 வயது இளைஞன் என பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபருக்கும் , கீரிமலை பிரதான வீதியில் வசிக்கும் நபருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, சந்தேகநபர் அவரை வாளால் தாக்குவதற்காக முயற்சி செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

யாழ். நிருபர் - மயூரப்பிரியன்

No comments:

Post a Comment