இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் கைதாகி விடுதலை - News View

About Us

About Us

Breaking

Sunday, March 31, 2019

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் கைதாகி விடுதலை

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவரான திமுத் கருணாரத்ன கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை, கிங்ஸி சந்தி பகுதியில் நேற்று அதிகாலை 5.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் திமுத் கருணாரத்ன மதுபோதையில் இருந்தாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணையின் பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment