பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களைக் குறைக்கும் நோக்கில் 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட '1938' பெண்கள் உதவி தொலைபேசி சேவை தற்போது செயற்பட்டு வருகின்றது.
பரந்தளவில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பொறுப்பேற்று அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்வது இச்சேவையின் மூலம் இடம்பெறுகின்றது.
இங்கு வாரத்தில் கடமை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.15 மணி வரையில் இந்த உதவி தொலைபேசிச் சேவை செயற்பாட்டில் இருக்கும்.
இச்சேவையின் ஊடாக பெண்களுக்குத் தேவையான சட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment