வாள் வெட்டு குழுத் தலைவரின் வீடு புகுந்து தாக்குதல்! - News View

About Us

About Us

Breaking

Sunday, February 24, 2019

வாள் வெட்டு குழுத் தலைவரின் வீடு புகுந்து தாக்குதல்!

வாள் வெட்டு குழுவின் தலைவர் எனவும், மானிப்பாயில் நடைபெற்ற கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரும், வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார் எனவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்ட, சன்னா என அழைக்கப்படும் பிரசன்னாவின் வீட்டுக்குள் புகுந்து பெற்றோல் ஊற்றி மோட்டார் சைக்கிள்கள் எரியூட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மானிப்பாய் கட்டப்பாழி வீதியில் உள்ள வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் நேற்று (24) மாலை நடத்தப்பட்டுள்ளது. 

வீட்டுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை பெற்றோல் ஊற்றி எரியூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment