மதவாக்குளம் வித்தியாலயத்தில் புதிய தொழில் நுட்ப ஆய்வுகூடம் திறப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 13, 2019

மதவாக்குளம் வித்தியாலயத்தில் புதிய தொழில் நுட்ப ஆய்வுகூடம் திறப்பு

மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆரம்ப வகுப்பு செயற்பாட்டறைக் கட்டடம், புதிய விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வு கூடக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா, (11) திங்கட்கிழமையன்று, வித்தியாலய அதிபர் ஐ.எம். பஷீர் தலைமையில் இடம்பெற்றது. 

மேற்படி புதிய கட்டிடத் தொகுதிகளின் நினைவுப் படிகத்தை, ஆனமடுவ தொகுதி ஐ.தே.க. அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாலித ரங்கே பண்டார திரை நீக்கம் செய்து வைத்தார். 

இந்நிகழ்வில், வித்தியாலய உப அதிபர் ஐதுரூஸ் முஹம்மத், பாடசாலை அபிவிருத்திச் சங்க மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். கட்டிடங்களின் அழகிய உள்ளக தோற்றங்களையும் படங்களில் காணலாம்.

மினுவாங்கொடை நிருபர் 

No comments:

Post a Comment