பாடசாலை பாட விதானத்தில் சட்டத்தை ஒரு பாடமாக சேர்க்க அமைச்சரவை பத்திரம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 12, 2019

பாடசாலை பாட விதானத்தில் சட்டத்தை ஒரு பாடமாக சேர்க்க அமைச்சரவை பத்திரம்

பாடசாலை பாட விதானத்தில் சட்டத்தை ஒரு பாடமாக சேர்த்துக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரமொன்றை நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறளை சமர்ப்பித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் பலர் பாடசாலைக்கு செல்லாதவர்கள், அத்துடன் மற்றும் சிலர் நாடடின் சட்டங்களைப் பற்றி தெரியாதவர்கள். இதன் காரணமாகவே அவர்கள் சிறை செல்ல நேருகிறது. இதன் காரணமாகவே இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்ததாக அமைச்சர் கூறுகிறார்.

கஹவத்தையில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார்.

மரண தண்டனையை அமுல் செய்வது பற்றி பேசப்பட்டு வந்த போதிலும் 1976 க்கு பின்னர் மரணதண்டனை விதிக்கப்படவில்லை. இறுதியாக 1976 ல் சந்திரபால என்பவரே மரண தண்டனைக்கு ஆளானவர். 

மரண தண்டனையை நீக்குவதான சர்வதேச உடன்படிக்கையொன்றில் இலங்கையும் கைச்சாத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்று அமைச்சர் தலதா அத்துக்கோறள அக் கூட்டத்தில் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment