காதிர் கானுக்கு கலாபூஷண விருது - News View

About Us

About Us

Breaking

Sunday, February 3, 2019

காதிர் கானுக்கு கலாபூஷண விருது



2018 ஆம் ஆண்டுக்கான 34 ஆவது கலாபூஷணம் அரச விருது வழங்கல் வைபவம், கடந்த (29) செவ்வாய்க்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு தாமரைத் தடாக கலை அரங்கில் நடைபெற்றது. 

இதன்போது, எழுத்து, இலக்கியம் மற்றும் ஊடகம் ஆகியவற்றில் ஆற்றிய சேவைக்காக, மினுவாங்கொடையைச் சேர்ந்த ஐ. ஏ. காதிர் கான் , முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ் ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக்கிடமிருந்து, கலாபூஷணம் விருது பெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment